இந் நிகழ்வில் தலைமை அதிதியாக தேசிய சூறா சபை தலைவர் திரு பீ.எம் தாரிக் மஹ்மூத் அவர்களும், கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் திரு என்.எம் அமீன் அவர்களும், கொழும்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஆர் பிரேம திலக அவர்களும், மேலும் அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி திருமதி பரீனா ருஸைக், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி திருமதி புர்கான் பீ இப்திகார், திருமதி ரஸ்னி ராசிக், அல் ஹிதாயா பாடசாலையின் பிரதி அதிபர் இஸ்மி, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் திரு எம்.வை.எம் அஸ்லம், தேசிய ஷூரா சபை அங்கத்தவர் சகோதரர் அன்வர் சாதாத் மற்றும் மத தலைவர்களான கௌரவ ஸ்ரீ சீவலி பிக்கு, உமர் அஹமட் மௌலவி மற்றும் ஆனந்த சுவாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் AUMSA வினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடளாவிய ரீதியிலான மர நடுகை செயற்திட்டத்தில் பல்கலைக்கழகங்களின் 25 முஸ்லிம் மஜ்லிஸ்கள், 15 இளங்கலை பட்டதாரி அமைப்புகள், ஏனைய அமைப்புக்கள் மற்றும் நாட்டின் சகல பிரஜைகளும் இச்செயற்றிட்டத்தில் தங்களின் பங்களிப்புகளை வழங்கினார்கள். இதன் மூலம் நாடு பூராகவும் 5000 இற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன.