கோலாகலமாக நடைபெற்ற பாலையடி வாலவிக்னேஸ்வருக்கு ஆறாவது மகா கும்பாபிசேகம்!

காரைதீவு நிருபர் சகா-ரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் ஆறாவது புனராவர்த்தன அஸ்டபந்தன மகாகும்பாபிசேகம் நேற்று 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுபவேளையில் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிசேக கிரியைகள் யாவும் பிரதமகுரு சிவாகமபானு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்து. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பிரதான இராசகோபுரம் உள்ளிட்ட அனைத்து பரிவாரமூhத்திகளுக்கும் கும்பாபிசேகம் நடைபெற்றது. பக்தர்களின் அரேஹரா கோசம் விண்ணைப்பிளக்க பிரதான கலசத்தில் நீர் சொரியப்பட்டது. குருமாரின் வழிகாட்லில் பக்தர்கள் சிறப்பாகத்தொழிற்பட்டனர்.
கடந்த 2004.05.02ஆம் திகதி இறுதியாக ஜந்தாவது மகாகும்பாபிசேகம் நடைபெற்றநிலையில் 16வருடங்களுக்குப்பின் நேற்று ஆறாவது மகாகும்பாபிசேகம் நடைபெறுகின்றது.

நேற்று 06ஆம் திகதி வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் கிரியை காலைமுதல் நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை நடைபெறவிருக்கும் இக்கிரியையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மகா கும்பாபிசேகம் இன்று 07ஆம் திகதி காலை 8.57மணிமுதல் 10.09மணி வரையான சுபமுகூர்த்தவேளையில் நடைபெற்றத து.கும்பாபிசேகத்துடன் திரிதள ராஜகோபுரம் நேற்று பாலையடி வாலவிக்னேஸ்வருக்கு ஆறாவது மகா கும்பாபிசேகம் குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழாவும் நடைபெற்றது.
அதற்கு முன்னோடியாக முதலாந்திகதி(01.02.2020) கர்மாரம்பத்துடன் கும்பாபிசேகக்கிரியைகள் ஆரம்பமாகின. கலசபூஜைகள் திருவிளக்குப்பூஜைகள் எண'ணெய'க'காப'பு என்பனவும் நடைபெற்றுவந்தன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -