அக்கரைப்பற்று பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி திருகோவில், அக்கரைப்பற்றுபிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகராக (ASP)நியமனம்.

எம். ஜே.எம். சஜீத்-
க்கரைப்பற்று பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியாக கடமைவகித்த திருஎஸ்.ஜே.பீ. சமன் குமார நேற்று முன் தினம் (28) அக்கரைப்பற்று பிரதேச உதவி பொலிஸ்அத்தியட்சகராக தனது கடமையினைஅக்கரைப்பற்றில் வைத்து உத்தியோக பூர்வமாகபாரம் எடுத்தார்.

இவர் கம்பளை பிரதேசத்தை பிறப்பிடமாககொண்டவர்.தனது உயர்தர கல்வியினை கண்டிதர்மராஜா மகா வித்தியாலயத்தில் கற்றுவந்திருந்தார்.

இலங்கை பொலிஸ் திணைகளத்தில் 1989 ஆம்ஆண்டு காலப்பகுதியில் உப பொலிஸ்பரிசோதகராக (S.I)பதவியேற்றார் இதன் பிற்பாடு1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ்பரிசோதகராக (I.P) பதவி உயர்வு பெற்றார் அதன்பிற்பாடு 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமபொலிஸ் பரிசோதகராக (C.I) ஆக பதவி உயர்வுபெற்று பல பிரதேசங்களில் கடமையாற்றிய இவர்2017 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுமக்களுக்கான பணியினை செய்து வந்தார். தனது29 வருட சேவையின் பின் திருகோவில்,அக்கரைப்பற்று பிரதேச உதவி பொலிஸ்அத்தியட்சகராக (A.S.P) ஆக 2018.11.28 ஆம் திகதிதனது பதவியினை பாரம் எடுத்து கடமையினைமேற்கொண்டு வருகின்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -