கடத்தப்பட்ட வர்த்தகர் ஷகீம் சுலைமான் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு..!

டந்த சில நாட்களாக கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த பம்பலபிட்டிய கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் ஷகீம் சுலைமான் என்பவரின் சடலம் மாவனல்லை ருகுலேகம பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹெம்மாதகம பாதையில் இனந்தெரியாத நிலையில் காணப்பட்ட சடலத்தை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு மற்றும் இறந்தவரின் தந்தை, உறவினர்கள் ஆகியோர் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அடையாளம் கண்டுள்ளனர்.

வர்த்தகர் ஷகீமை, வேறு ஒரு இடத்தில் கொலை செய்து விட்டு, குறித்த இடத்தில் கொண்டு வந்து போட்டுள்ளார்களா? அல்லது அந்த இடத்திலேயே அவரைக் கொலை செய்தார்களாக என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று மாலை கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பிலான மரண விசாரணைகள் இன்று (25) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்டு அவரது ஜனாஸா தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி கொத்தலாவலை அவனியூவைச் சேர்ந்த மொஹமட் ஷகீம் கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தமையும் குறித்த பகுதியிலிருந்தே, படுகொலை செய்யப்பட்டவரின் தந்தைக்கு 20 மில்லியன் கப்பட் கேட்டு, தெலைபேசி அழைப்பு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -