சீனாவில் ஒரு வயதான நபர், பெண் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டபோது, அந்த முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது ஆணுறுப்பு அப்பெண்ணின் பெண்குறிக்குள் சிக்கிக் கொண்டதால் அப்பெண்ணால் அவரை விட்டுப் பிரிய முடியவில்லை.
இதையடுத்து பிரிக்க முடியாத நிலையிலேயே இருவரையும் போலீஸார் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சீனாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடப்பது அரிதிலும் அரிதானது என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த முதியவரின் உடல் மீது படுத்த நிலையில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு ஸ்டிரெச்சரில் வைத்து கூட்டி வந்த காட்சி தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இருவரையும் துணியால் மூடிய நிலையில் மருத்துவமனைக்கு ஊழியர்கள் கொண்டு வந்தனர். அதை பய பீதியுடன் பலரும் கூடி பார்த்து மிரண்டனர்.
சம்பந்தப்பட்ட பெண் விபச்சாரப் பெண் ஆவார். அவருடன் இந்த முதியவர் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். முதியவர் மீது அமர்ந்து அப்பெண் உறவு கொண்டுள்ளார். அப்போது முதியவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.
ஆனால் அவரது ஆணுறுப்பானது, பெண்ணுறுப்புக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பெண்ணால் எழ முடியவில்லை. தவித்துப் போன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்தார்.
இதையடுத்து விரைந்து வந்த மருத்துவனை ஊழியர்கள், இறந்த உடலையும், உடல் மீது இருந்த பெண்ணையும் அப்படியே தூக்கி ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அதற்கு மேல் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. முதியவரின் உடலை விட்டு அப்பெண் பிரித்து எடுக்கப்பட்டாரா. அப்படி பிரித்து எடுக்கப்பட்டார் என்பது தெரியவில்லை.