ஒன்று பட்டு உலகையாள்வோம்.....

என் மனம் சிறகடித்துப்பறந்திருந்தது

ஆயிரமாயிரம் வார்தைகள்

ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது

என் தலைவனின் முடிவுகளுக்காய்

அத்தனையும் காத்திருந்தது


எங்கே உங்கள் தீர்மானம்

வரலாற்றுப் பிழையாகிடுமோவென்று

உன்னிப்பாய் ஊர்ந்தவண்ணமிருந்தேன்

உளம் மகிழும் முடிவுதந்து - மனங்களில்

முடிசூடா மன்னனானாய்


அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பட்சிகள் பல தன்பங்குப் பா ஓதுகின்றன

காதில் வாங்கிடாது - வேங்கையாய்

உம்வழியில் வீறு கொண்டு நடந்திடுங்கள்

நாளைய சரித்திரம் காத்திருக்கிறது


எட்டப்பர் கூட்டம் எள்ளிநகையாடுகின்றனர்

அவர்களின் மனசாட்சிக்கே நாளை

பதில்சொல்லாமல் தவித்துநிற்பர்

சமூகமென்னும் பெருங்கடலுடன்

விளையாடுகின்றனர் பேரலை மறந்து



பெருவெள்ளங் கடந்து

மனிதவெள்ளத்தின் ஆழங்கண்டு

ஆட்சியாளர்களின் அகமழுகிறது

ஆழும் போதே ஆற்றும் சேவையற்று

ஆசைக்கு அடிமையாயிருந்தனரே......



MY3 என்னும் சுனாமி

செல்லா இடங்களெல்லாம் சென்று

வெல்லும் சூட்சிமம் அமைத்து

நல்லோர் யாவரையும் சேர்த்து

நாளைய நலவுக்காய் காத்திருக்கிறார்



பெருந்தலைவன் அஷ்ரஃபின் வழியில்

உம்மோடு பயணிக்கும் நாங்கள்

உம் சுட்டுவிரல் திசையில்

துணிந்து நின்று உயிரும் விட

உளமாறக் காத்திருக்கிறோம்

நாளை தோற்றுவிட்டால்

என்ற கேள்வியில் பயணமெதற்கு

நாளைய தீர்ப்புக்கு அதிபதி எம் இறைவன்

தோற்றாலும் துவண்டிடா

துணிவுள்ள சமுகம் எம்முடையது


நாளைய சந்ததிக்காய்

இன்றைய முடிவில் உறுதியாகி

பெறுமதியான தீர்வுகளுக்காய்

ஒன்றுபட்டு உலகையாள

இன்றே புறப்படு என் தோழா.............


.
கவிஞர். பாலமுனை ஹாஷிம் கட்டாரில் இருந்து
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -