அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா



நூருல் ஹுதா உமர்-
ன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், உலக சக்திகளின் மோதல்கள் மற்றும் பிராந்திய அரசியல் கூட்டணிகள் காரணமாக பல்வேறு நாடுகள் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இரு வலுவான சக்திகளின் ஆதரவுடன் செயல்படும் தரப்புகளுக்கு எதிராக ஒரே நாடு போராடும் சூழல் உருவாகியுள்ளது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சில அரபு நாடுகளில் நிலவும் அரசியல் தலைமைகள் வெளிநாட்டு தாக்கங்களின் கீழ் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அரங்கில் பலர் வலியுறுத்தி வரும் நிலையில், காஸா, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக உலக நாடுகள் ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்ற கவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் தாராளமான மற்றும் சமநிலையான நிலைப்பாட்டை எடுத்து, அமைதி மற்றும் மனிதாபிமான அடிப்படைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, தற்போதைய உலக அரசியல் பதற்ற நிலைமைகள் விரைவில் தீர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது பிரார்த்தனையும் நம்பிக்கையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :