இந்த கடற்கரை பூங்காவினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் வைபவமாக திறந்து வைத்து, கல்முனை மாநகர சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
நாட்டின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதோடு, சுற்றுலா வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களின் ஓய்வுநேரப் பயன்பாடு மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.
மேலும், கரையோரப் பிரதேசங்களை அழகுப்படுத்தி, பசுமை சூழலை உருவாக்குவதன் மூலம் இளைய தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் MM. ஆசிக், கிழக்கு மாகாண கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியாளர் M. துலஷிதாஸன், கல்முனை மாநகர ஆணையாளர் TM. றாபி, கரையோரம் பேணல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியின் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த புதிய கடற்கரை பூங்கா அமைக்கப்பட்டதன் மூலம், சாய்ந்தமருது பகுதி மக்கள் ஓய்வுநேரத்தில் சுகமாக நேரம் கழிக்கவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், கடற்கரைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.











0 comments :
Post a Comment