சாய்ந்தமருது மாளிகைக்காடு பைதுஸ் ஸக்காத் அமைப்பு 102 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கியது..



சாய்ந்தமருது மாளிகைக்காடு பைதுஸ் ஸக்காத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேவையுடையவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு 2025.11.30 ஆம் திகதி அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக அக்கரைப்பற்று அபூபக்கர் சித்திக் அரபுக் கல்லூரியின் அதிபரும் அக்கரைப்பற்று ஜம்யத்துல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷேய்க் மௌலவி ஏ.எல்.எம் கலாமுல்லாஹ் ( ராஷாதி) கலந்துகொண்டு உரையாற்றினாட்.

நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். சலீம் (சர்க்கி) ஜம்மிஇய்யாவின் செயலாளர் அஷ்ஷேய்க் மௌலவி எம்.எச்.எம். நப்றாஸ் (ரஹ்மானி) உள்ளிட்ட பலர் பங்கு கொண்டிருந்தனர்.

உதவிகளைக் கோரி 175 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர் அதில் 102 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் 04 பேருக்கு தையல் மெசின்களும் ஒரு குடும்பத்துக்கு மாவு அறைக்கும் மெசினும் 07 குடும்பங்களுக்கு இடியப்பம் சுடும் மெசின் மற்றும் சட்டி உட்பட பொருட்களும்,சிலருக்கு குறையாகவுள்ள கட்டடத்துக்கான கதவு ஜன்னல்கள் போன்ற பொருட்களை வழங்கி பூரணப்படுத்தியமையும் 5 குடும்பங்களுக்கு சில்லரைக் கடை திற்ப்பதற்கான நிதியும் வழங்கியதுடன்

இரண்டு கிட்னி நோயாளிகளுக்கு மாதா மாதம் மருத்துவ செலவும் அத்தோடு 64 குடும்பங்களுக்காக 236 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :