அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் சில இடங்களில் தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வொலிவேரியன் புதிய வீட்டுத்திட்டத்தின் எஹாட் வீட்டுத்திட்டம் வெள்ளத்தில் முற்றாக மூழ்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பொருட்களையும் மீட்கும் பணிகளில் சாய்ந்தமருது ஜனாஷா நலன்புரி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுப்பொதிகளை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் வழங்கி வைத்தார். இன்றைய இரவு உணவுகளை சாய்ந்தமருது உலமா சபையும் நாளை வர்த்தக சங்கமும் வழங்கவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எல்லைக்குள் பகல் 12 மணிவரை 78 குடும்பங்களைச் சேர்ந்த 265பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஜ. முஆபிகா தெரிவித்தார்.
மேலதிக பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் விதத்தில் முன்னெடுப்புக்களை சாய்ந்தமருது பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.

0 comments :
Post a Comment