07 வருட முறையான பாடத்திட்டத்தைக் கொண்டு உலமாக்களையும் "தஹ்வா" பணியாளர்களையும் மற்றும் இளம் சமூகத் தலைவர்களையும் உருவாக்கும் பணியில் இக்கல்லூரி ஈடுபட்டு வருகிறது.
இங்கு உள்வாங்கப்படும் சகல மாணவர்களும் க.பொ.த. சாதாரண க.பொ.த உயர்தரம், அல்-ஆலிம், தர்மாச்சார்ய, அஹதிய்யா போன்ற அரச பரீட்சைகளுக்கு தயார் செய்யப்படுவர்.
அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு சர்வகலாசாலைகளிலும் மாணவர்கள் மேற்படிப்பைத் தொடரவும் வழிகாட்டப்படுகின்றனர்.
மாணவர்களின் ஆளுமை விருதிக்காக தொழிற் பயிற்சி, கணனி மற்றும் ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளிலும் கற்பிக்கப்படுகின்றது.
அல்-குர்ஆன் மனனப்பிரிவில் இணைந்து கொள்பவர்கள் அல்-குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராகவும் நல்லொழுக்கம் உள்ளவராகவும் 2026 இல் தரம் 06 சித்தியடைந்தவராகவும் 12 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
கிதாபு பிரிவில் இணைந்து கொள்பவர் 2026 ஆம் ஆண்டில் தரம் 09 இற்கு சித்தியடைந்தவராகவும் நல்லொழுக்கம் உடையவராகவும், 2026.01.01ல் 15 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 06/12/2025
07/12/2025 ஆகிய தினங்களில் நடை நடைபெறவுள்ளன.
ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை கல்லூரி காரியாலயத்திலிருந்து பெற்று அதிபர், அல்-ஹாமியா அரபுக் கல்லூரி, வாடி வீட்டு வீதி, கல்முனை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
.

0 comments :
Post a Comment