சிறந்த மருத்துவ ஆக்கங்களுக்கான விருதினை பெற்ற ஊடகவியலாளர் மட்டு. துஷாரா



அபு அலா-
டக உலகில் சிறந்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் பிரம்மாண்டமான Guru awards – 2025 விருது வழங்கும் விழாவில், சிறந்த மருத்துவ ஆக்கங்களுக்கான விருது ஊடகவியலாளர் மட்டு. துஷாராவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அண்மையில்
இடம்பெற்ற இவ்விருது வழங்கும் விழாவின்போது இந்த உயரிய விருதினை மயோன் குரூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எம்.எம்.றிஸ்லி முஸ்தபாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த மட்டு. துஷாரா எனும் புனைப் பெயரில் ஆங்கில மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான மருத்துவ விளக்க கட்டுரைகளை வாராந்தம் எழுதி வருகின்ற இவருக்கு குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற Guru awards – 2025 விருது வழங்கல் விழாவில் மயோன் குரூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எம்.எம்.றிஸ்லி முஸ்தபா, குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா சட்டத்தரணி எம்.கே.எம்.பர்சான், நெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் என்.எம்.சப்னாஸ் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து இவ்விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :