பல்கலை மாணவர்களுக்கு மடி கணினி அன்பளிப்பு — ஹாஷிம் உமர் பௌண்டேசனின் 15ஆம் கட்ட விநியோகம்



ஹாஷிம் உமர் பௌண்டேசன் நிறுவனத்தின் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணினிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் 15ஆம் கட்ட விநியோக நிகழ்வு கடந்த 2025.10.11 அன்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையாற்றினார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எ. பி. செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அத்துடன், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை செய்தி ஆசிரியர் ஏ. எம். ஜவ்பர், ஒருங்கிணைப்பாளர் ஆகிப் மொஹமட், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். ஐ. எம். சித்தீக், அமைப்பின் பணிப்பாளர் மரியம், ஊடகவியலாளர்கள் சியாவுல் ஹஸன், கஜமுகன், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த வாய்ப்பில் ஜே. திலுக் ஷான் (எட்டியாந்தோட்டை), குகதாசன் துஷ்யந்தனி (யாழ்ப்பாணம்), எஸ். மன்ஷா (கலேவல), எம். ரிபானா (மொனராகலை) மற்றும் ஏ. ஜே. எப். முபஷ்ஷரா (கஹட்டோவிட்ட) ஆகிய மாணவர்கள் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களிடமிருந்து மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :