1990 குருக்கள் மட கொலை: நீதி பெறும் அகழ்வு அக்டோபரில் தொடக்கம்



குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்ற‌ நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் க‌ருத்தை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ர‌வேற்றுள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்திருப்ப‌தாவ‌து,

1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் மக்கா சென்று திரும்பிய முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்துள்ளனர்.

இந்த‌ அநியாய‌த்துக்கெதிராக‌வும் அப்புதைகுழி தோண்ட‌ப்ப‌ட்டு நீதி கிடைக்க‌ முஸ்லிம்க‌ளின் பெரு வாக்குக‌ளைப்பெற்ற‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை.
இத்த‌னைக்கும் ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌ இருந்தும் கையாலாகாத‌ அமைச்ச‌ராக‌ இருந்தார். யுத்த‌ கால‌த்தில் அந்த‌ இட‌த்துக்கு சென்று பார்வையிட‌ ர‌வூப் ஹ‌க்கீம் ப‌ட‌ப்ப‌ட்டிருந்தாலும் யுத்த‌ம் முடிந்து நீதி அமைச்ச‌ராக‌ இருக்கும் போதாவ‌து போய் பார்வையிட்டிருக்க‌லாம்.

அதே போல் இவ்வாறு ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டோரில் காத்தான்குடி ம‌க்க‌ளே 99 வீத‌ம் இருந்தும் அவ்வூர் ம‌க்க‌ளின் வாக்குக‌ளால் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரான‌ ஹிஸ்புல்லாவும் எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை.

இந்த‌ நிலையில் த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சாங்க‌த்தில் இத‌னை தோண்டுவ‌த‌ற்கு எந்த‌ அழுத்த‌மும் இன்றி நீதி ம‌ன்ற‌ம் அனும‌தித்துள்ள‌து.

இந்த‌ இட‌ம் தோண்ட‌ப்ப‌ட்டு இஸ்லாமிய‌ ச‌ம‌ய‌ முறைப்ப‌டி மீண்டும் அதே இட‌த்தில் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டு அந்த‌ இட‌த்துக்கு முஸ்லிம்க‌ள் வ‌ந்து பிரார்த்திக்கும் இட‌மாக‌ அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும்.


முஸ்ன‌த் முபாற‌க்
த‌லைவர்
ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :