முஸ்லிம் சமுகத்தின் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு கட்சியின் தலைவரும் செயலாளரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசால் ஆட்சி செய்த முழு சபைகளும் மாற்றுக் கட்சியினர் பிடித்திருக்கிறார்கள் அதேபோல மட்டக்களப்பு அதேபோல திருகோணமலை கண்டியும் அதேபோல் நடந்திருக்கிறது.
இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்து ஓரமாக வேண்டும் என்று இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல அம்பாறை மாவட்டத்திலே மாவட்ட செயலாளர் என்று சுற்றி திரியும் நபரை உடனடியாக பதவி விலக்க வேண்டும். அவருக்கு பதிலாக தகுதியான ஒருவருக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும். இதனை பல தடவை நாங்கள் கூறினோம். ஆனால் கேட்கவில்லை.அதன் பிரதிபலிப்பும் இந்த தோல்விக்கு காரணம்.
ஏ.சி. யஹியாகான்
செயலாளர் நாயகம்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்
0 comments :
Post a Comment