தோல்வியை ஏற்றுக்கொண்டு ஹக்கீம் பதவி விலக வேண்டும் ! -யஹியாகான்



மூகத்தையும் மக்களையும் வருடா வருடம் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் துரத்தப்பட வேண்டும் என்று எண்ணத்தோடு மக்கள் கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.

முஸ்லிம் சமுகத்தின் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு கட்சியின் தலைவரும் செயலாளரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசால் ஆட்சி செய்த முழு சபைகளும் மாற்றுக் கட்சியினர் பிடித்திருக்கிறார்கள் அதேபோல மட்டக்களப்பு அதேபோல திருகோணமலை கண்டியும் அதேபோல் நடந்திருக்கிறது.

இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்து ஓரமாக வேண்டும் என்று இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல அம்பாறை மாவட்டத்திலே மாவட்ட செயலாளர் என்று சுற்றி திரியும் நபரை உடனடியாக பதவி விலக்க வேண்டும். அவருக்கு பதிலாக தகுதியான ஒருவருக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும். இதனை பல தடவை நாங்கள் கூறினோம். ஆனால் கேட்கவில்லை.அதன் பிரதிபலிப்பும் இந்த தோல்விக்கு காரணம்.

ஏ.சி. யஹியாகான்
செயலாளர் நாயகம்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :