சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவும்; கற்றல் உபகரணங்கள் வழங்கலும்!



சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் தலைமையில் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2025.02.01 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பொலன்னறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக என்ஜினியரிங் கன்சல்டன்சியின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.யூ.எஸ். நியாஸ் மற்றும் வுரவ்ன் வூட் றசிடன்ஸ் உரிமையாளர் எம்.எச். முகம்மட் நாசர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வுக்கு விஷேட அதிதிகளாக கேபிடல் எவ்.எம். சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.ஜாபீர், பிறை எவ்.எம். ஏ.ஆர்.எம். நௌபீல், EXMPS மற்றும் UOPSF ஆகியவற்றின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஜி. இக்பால் மற்றும் சாய்ந்தமருது சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர். ரோஸ்மி மற்றும் எம்.யூ.எஸ். நிஜாம் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

மாணவர்களின் ஆடல் பாடல் என களைகட்டிய நிகழ்வில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின்போது அமைப்பின் அங்கத்தினர்கள் மற்றும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார்களால் மண்டபம் நிறைந்திருந்தது.








































 














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :