ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையத்தின் அனுசரணையில் டிஜிட்டல் யுகத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளை தயார் படுத்தும் செயலமர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
பாதுகாப்பான மற்றும் அதிக விடயங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் யுகத்தை உருவாக்குவதற்கான பணி குறித்த கூடுதல் புதுப்பிப்புகளுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் செயலமர்வொன்று அண்மையில்(1) சம்மாந்துறை இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அர்ஷத் ஆரிப் பிரதம வளவாளராக கலந்து கொண்டார்.

டிஜிடல் உலகில் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லவும் தவறான தகவல்களை திறம்படச் சமாளிக்கவும் இந்த பயிற்சி பாசறையினூடாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பயிற்றிவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஊடகக் கல்வியறிவு மற்றும் உண்மையான தகவல்களை சரிபார்க்கும் திறன்கள் சம்பந்தமாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :