முன்னாள் நீதி அமைச்சர், இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓர் வங்கியாளர் பொருளாதார நிபுணர் என பல்வேறு பதவிகளை வகித்த மிலிந்த மொரகொட அவர்கள் எழுதிய மலரும் யுகத்திற்கு....எனும் தமிழ் மொழிபெயர்ப்பு நுால் 01.06.2024 பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவர் கலாநிதி ரகுபரன் அவர்கள் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக முன்னாள் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீறிபவன் கலந்து கொண்டார்.
வரவேற்புரையை கே.பாலசுந்தரம் பாத் பைன்டர் பௌன்டேசனின் முகாமைத்துவ பணிப்பாளர், நுால் பற்றிய உரையை கலாநிதி எம்.கனேசமூர்த்தி பொருளாதார சிரேஸ்ட விரிவுரையாளர்,கொழும்பு பல்கலைக்கழகம். நுால் விமர்சன உரையை ,கலாநிதி யசோதரா கதிர்காமத் தம்பி சிரேஸ்ட விரிவுரையாளர், சட்டக் கல்வி, நிலையம், இந்தியா கலாச்சாரத் நிலையம் மற“றும சுவாமி விவேகானந்தா நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் டட்டா ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.
இந் நுாலினை மொழி பெயர்த்த லேக் கவுஸ் தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திருமதி வீ.ஆர்.வயலட் திருமதி ஜெனிபர் மொரகொடவினால் பாராட்டி கௌரவிக்க்பட்டார். அத்துடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீறிபவன் நுாலசாிரியர் மிலிந்த மொரகொட அவர்களை பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
நுால் இலவசமாக பாடசாலை மாணவர்கள் வருகை தந்தவர்களுக்கு வழங்கி வைக்க்ப்பட்டது.
.jpg)











0 comments :
Post a Comment