தம்பலகாமத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெசாக் விழா



ஹஸ்பர் ஏ.எச்-
வெசாக் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் வெசாக் விழாவின் ஒரு பகுதியாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 99 சிறீ சுதர்சனா ராம விகாரை,முள்ளிப்பொத்தானை சுவர்ணமாலி விகாரை,தம்பலகாமம் பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் (24,25.05.2024) திகதிகளில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,இளைஞர் சேவைகள் அதிகாரி ஐ.ஜாபிர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பௌத்த மதக்குருக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் போதை ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு, தர்ம கலந்துரையாடல், பக்திப்பாடல் போன்றனவும் இடம் பெற்றதுடன் முள்ளிப்பொத்தானை நிகழ்வின் போது நூடில்ஸ் தன்சலும் வழங்கி வைக்கப்பட்டன. இளைஞர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :