இதற்கு அமைவாக அம்பாறை மாவட்ட பேராளர்கள் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான A.L.அப்துல் மஜீட்( முழக்கம்) அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று (30.05.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் மன்சூர் ஏ காதர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான M.S. உதுமாலெப்பை (JP) மற்றும் அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமானA.C.சமால்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் 18 கிராமங்களில் அமைந்துள்ள 227 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் பேராளர்களை அழைப்பது எனவும் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களை பிரதேச மட்ட அமைப்பாளர்களும் கிராமிய அமைப்பாளர்களும் கலந்துரையாடி பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமிற்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment