பாசிக்குடா கடலில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா - பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த நபர் இன்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை (28) குளித்துக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போனார்.

இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் நேற்று 3 மணிநேரம் தேடியும் அந்நபர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்று தீவிர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :