அரிசி விநியோகம் ஜனாதிபதித் தேர்தலுக்கான இலக்கு அல்ல.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு



Ø நாங்கள் விநியோகம் செய்தால் அது தேர்தலுக்கான இலக்கு....

Ø எதிர்க்கட்சி விநியோகம் செய்தால் அது சமூக சேவை….

Ø எதிர்க்கட்சிகளின் மாட்டுக் கோட்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம்...

Ø அரிசி விநியோகம் ஜனாதிபதித் தேர்தலுக்கான இலக்கு அல்ல...


நாடு முழுவதிலும் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும் அது அது தேர்தலுக்கான இலக்கு அல்ல எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு எதையாவது விநியோகித்தால் அது தேர்தலுக்கான இலக்கு என்றும், எதிர்க்கட்சிகள் எதையாவது விநியோகித்தால் அது அது சமூக சேவை என்றும் கூறும் எதிர்க்கட்சிகளின் மாட்டுக் கோட்பாட்டிற்கு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் வலியுறுத்துகின்றார்.
கம்பஹா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்ச்சிகளில் நேற்று (21) கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். களனி, பியகம, மஹர, கட்டான மற்றும் திவுலப்பிட்டிய ஆகிய தேர்தல் தொகுதிகளில் நேற்று இந்த அரிசி விநியோகிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் உள்ள 2,511,840 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் நேற்று ஆரம்பமானது. இதற்காக அரசாங்கம் 4,676,474,300 ரூபாவை செலவிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 2,41,623 குடும்பங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அதற்காக செலவிடப்பட்ட தொகை 459,083,700 ரூபா வாகும்

இத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான பயனாளி குடும்பங்கள் அரிசி மானியம் பெற உரித்துடையவர்கள். அந்த குடும்பங்களின் எண்ணிக்கை 283,013. அதற்காக செலவிடப்பட்ட தொகை 537 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். அதன் பின்னர் இரத்தினபுரி மாவட்டம் அதிகளவான பயனாளி குடும்பங்களைக் கொண்டுள்ளது. அந்த குடும்பங்களின் எண்ணிக்கை 2,43,892 ஆகும். 400 மில்லியனுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, குருநாகல். மன்னார், மாத்தளை, மொனராகலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மஹர பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரிசி விநியோகக் கூட்டத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு வாக்குகளைப் பெறும் திட்டம் என்று எதிர்க்கட்சி கூறுகிறது. இந்த திட்டத்திற்கு எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை. இந்த இலவச அரிசி விநியோகம் வாக்குகளை எதிர்பார்த்து தொடங்கப்பட்டவை அல்ல. மக்களின் துயரங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. புதுவருடத்தை இலக்காகக் கொண்டு தான் இதைத் திட்டமிட்டோம். ஆனால் அரசிடம் அதிகப்படியான அரிசி இல்லாததால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. அரிசி வருவதற்கும் நேரமாகிவிட்டது.
அரிசி விநியோகம் செய்வதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா என சிலர் கேட்கின்றனர். பொருட்களை விநியோகிப்பது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல. மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு சற்று நிவாரணம் அளிக்க வேண்டும். எங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் சமூக நலப்பணிகளை செய்ய வேண்டாம் என கூறிய நிலையில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

இன்று எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை தேர்தலுக்கான இலக்கு என்று கொச்சைப்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாகப் பகிர்ந்தளித்துக் கொண்டு போகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மக்களுக்கு பொருட்களை விநியோகிக்கின்றனர். அவர்கள் பகிர்ந்தால் அது சமூக சேவை. மக்களுக்கான சேவை. அரசாங்கம் விநியோகம் செய்தால் அது தேர்தலுக்கான இலக்கு. அவை வித்தியாசமான கோட்பாடுகள். அரசாங்கம் விநியோகம் செய்வது தவறு. அவர்கள் அவற்றை விநியோகம் செய்வது நல்லது. அரசாங்கம் விநியோகம் செய்தால் அது தேர்தலுக்கான இலக்கு. எதிர்க்கட்சிகள் விநியோகம் செய்தால் அது சமூக சேவைகள். எதிர்க்கட்சிகளின் மாட்டுக் கோட்பாடுகளை நம்பி ஏமாற வேண்டாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :