வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பொத்துவில் கோமாரியில் வைத்து யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இச் சம்பவம் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் கோமாரி களுகொல்ல எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை அவர் சகபாடிகளுடன் மோட்டார் சைக்கிளில் கோமாரி கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென்று வீதியால் வந்த யானை அவரை இழுத்து அடித்துக் கொன்றது .
ஏனையவர்கள் தப்பி ஓடி விட்டார்கள்.
இவரது சடலம் தற்பொழுது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 52 வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்காரர்.
பிரதேசத்தில் நீண்ட காலமாக வீதி மின் விளக்கு இல்லாதது மின்சார வேலி இல்லாது அதற்கான காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் தெரிவித்தார்.
பிரேத சோதனை இடம் பெற்ற பிற்பாடு அவர்கள் சடலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment