வெளிநாட்டு சுற்றுலாப்பயணி யானை அடித்துக் கொலை ! இன்று அதிகாலை கோமாரியில் சம்பவம்!!



வி.ரி.சகாதேவராஜா-
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பொத்துவில் கோமாரியில் வைத்து யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இச் சம்பவம் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் கோமாரி களுகொல்ல எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை அவர் சகபாடிகளுடன் மோட்டார் சைக்கிளில் கோமாரி கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென்று வீதியால் வந்த யானை அவரை இழுத்து அடித்துக் கொன்றது .
ஏனையவர்கள் தப்பி ஓடி விட்டார்கள்.

இவரது சடலம் தற்பொழுது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 52 வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்காரர்.

பிரதேசத்தில் நீண்ட காலமாக வீதி மின் விளக்கு இல்லாதது மின்சார வேலி இல்லாது அதற்கான காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் தெரிவித்தார்.
பிரேத சோதனை இடம் பெற்ற பிற்பாடு அவர்கள் சடலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :