கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தொழுநோய் விழிப்புணர்வு





அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனைப் பிராந்தியத்தில் தொழு நோயினால் பாதிக்கப்பட்டு இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும் வைத்திய ஆலோசனைகளை வழங்கும் பொருட்டும் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் தொழுநோயாளர்களை அணுகும் விதம் மற்றும் சிகிச்சை நெறிமுளைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று அண்மையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பசால் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :