தம்பிலுவில் கிராமத்திற் முதல் மருத்துவத் துறை பேராசிரியருக்கு வரவேற்பு !



வி.ரி.சகாதேவராஜா-
ம்பிலுவில் கிராமத்தில் முதலாவது மருத்துவத் துறை பேராசிரியரான கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் குடும்ப நலத்துறை பேராசிரியர் வைத்திய கலாநிதி டாக்டர் கந்தசாமி அருளானந்தம் அவர்களுக்கு நேற்று பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தம்பிலுவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் அதன் பணிப்பாளர் கண. இராஜரத்தினம் கண்ணன் தலைமையில் இவ் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் குடும்ப நலத் துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற தம்பிலுவிலைச் சேர்ந்த டாக்டர் கந்தசாமி அருளானந்தம் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் குருகுல மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :