அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் 2013 ஆம் ஆண்டு அணியினர் சம்பியனாகத் தெரிவு



எம்.எம்.றம்ஸீன்-
ட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 09 பேர் கொண்ட 05 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில், 21 பழைய மாணவ அணிகள் பங்கேற்றுக் கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதித் தெரிவுக்கு 2007 ஆம் ஆண்டு அணியும், 2013 ஆம் ஆண்டு அணியும் தெரிவாகியது.

இதில் 2013 ஆம் ஆண்டு அணியினர் சம்பியனாகவும், 2007 ஆம் ஆண்டு அணியினர் இரண்டாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அணிக்கு ரூபா 75,000 பணப் பரிசும், சம்பியன் கிண்ணமும், இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட அணிக்கு ரூபா 50,000 பணப் பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிநாள் போட்டிக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதியாகவும், கெளரவ அதிதிகளாக சுங்கத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.நியாஸ், ஏ.சி.நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.சி.நியாஸ் மற்றும் பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :