ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து ஒழுங்குசெய்திருந்த தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.!



எம்.எம்.றம்ஸீன்-
றாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் நகரசபையின் விசேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்களின் தலைமையில் ஏறாவூர் நகரசபை பொது நூலக வளாகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இரஜாங்க அமைச்சருமான செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் கணக்காளர் ஆர்.எப்.புஷ்ரா, ஏறாவூர் நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹாறூன் உட்பட ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலையின் அதிபர்கள், மாணவர்கள் ஏறாவூர் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, சித்திரப் போட்டி, வீட்டிற்கு ஓர் நூலகம் எனும் போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்றவர்கள், நூலகங்களில் கடமை புரிந்து ஓய்வு பெற்றுச் சென்றவர்கள், நூலகங்களில் அர்ப்பணிப்போடு கடமை புரிந்தவர்கள், ஆகியோருக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :