பிரபல எழுத்தாளர், கவிஞர் தீரன் ஆர்.எம்.நெளஸாத் அவர்களுக்கு "தைலாப்பொட்டி" சிறுகதைத் தொகுப்பு வழங்கி வைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருதின் பிரபல மருதூர் கலைக்குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்மருதமாமணி பட்டம் பெற்றவர்- ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்,முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் , ஓய்வு இல்லாத இலக்கியச்செயற்பாட்டாளர்-- கிழக்கின் குறும்பா இலக்கியத்தின் முன்னோடி-- சிறுகதை-கவிதை-விமர்சனம்- போன்ற எல்லாத் தளங்களிலும் இயங்கிவருபவர்-- இரண்டாம் விஸ்வாமித்திரன் என்ற புனைபெயரில் இலக்கியஉலகில் நடமாடுபவர். கலாபூஷணம்விருதுபெற்றவர்-- எஸ்.பொ.விடம் எழுத்து பயின்றவர்-- கவர்ச்சிமிக்க மேடைப்பேச்சாளர்-- கவிஞர்-
விபுலானந்த அடிகளும் முஸ்லிம்களும்- திறனாய்வு - போன்ற 12 நூல்களின் ஆசிரியர் - திறனாய்வு துறையில் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர்-- அபாபீல்கள் கவிதா வட்டத்தின் தலைமை ஆலோசகர்-
பலருக்கு எழுத்தும் இலக்கியமும் கற்பித்தவர் அதிசயக்கலவையானவர்- ஏ. பீர்முஹம்மது எனும் நல்லாசிரியர் -- அவர்களின் புதிய சிறுகதைத் தொகுப்பான தைலாப்பொட்டி சிறுகதைத் தொகுப்பு நூல் ஓய்வுபெற்ற தபாலதிபரும் எழுத்தாளரும் கவிஞருமான ஆர்.எம்.நெளஸாத் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :