தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு!



திர்வரும் 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் 2024.02.26 ஆம் திகதி இடம்பெற்றது.

உள்ளூர் தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள் பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளிலான குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊடக பிரிவு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :