ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் கொழும்புச் செயற்குழுக் கூட்டம்



நூருல் ஹுதா உமர்-
க்கிய சமாதானக் கூட்டமைப்பின் கொழும்புச் செயற்குழுக் கூட்டம் 2024 ஜனவரி 14 அன்று கொழும்பு 7, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பொருளாளரும், ஸ்தாபகரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிதி பேச்சாளர்களாக ஏ.எல்.ஏ. அஸீஸ், எம். எச். ஹாஃபில் ஆகியோர் கலந்து கொண்டு அரசியல் போக்குகள், இலங்கை அரசியலின் எதிர்காலம், தேர்தல்கள் தொடர்பில் கருத்துரைத்தனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.எம் காதர், ஏ.முஸம்மில் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த கொழும்புச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :