சாய்ந்தமருதில் ஆறுகளை அண்டியுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு குடிபெயருமாறு பிரதேச செயலாளர் அறிவிப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை , இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் வான் கதவுகள் திறந்துள்ள நிலையில் சாய்ந்தமருது பிரதேச ஆறுகளை அண்மித்த பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் வெள்ள நிலமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயருமாறு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸிக் அறிவித்துள்ளார்.

இவ்வாறான அனர்த்த நிலமையின் போது சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் என்பவற்றை பயன்படுத்துமாறும், அவசர தேவைகளுக்கு கிராம சேவை உத்தியோஸ்தர்களின் உதவியை நாடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :