இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கடற்றொழில் துறை ஆற்றிவரும் பங்களிப்பை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் நிதி அமைச்சின் அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கரு சரு திட்டத்தின் மூலம் மீனவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது திட்டல்கள் தொடரபில் மீவனவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று(17) தொழில் திணைக்கள கேட்போர் கூட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷா நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், காலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் என்ற வகையில், மீன்பிடி தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் தொழிலில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
கரு சரு திட்டத்தின் மூலம் இந்த நாட்டின் தொழிலாளிகள் அனைவருக்கும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளோம் . உலகின் எனையே நாடுகளில் மீனவர்
நீர் குழாய் பொருத்தினர்,வைத்தியர் மற்றும் பொறியலாளர் என வேறுபட்டியின்றி அனைவரும் சமூகத்தில் சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் . அவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான கௌரவம் அளிக்கப்படுகிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொழிலாளிகளின் சம்பளத்தில் வித்தியாசம் உள்ள போதும் எந்தொரு நபரின் அங்கீகாரமும் கௌரவமும் மாற்றமடையாது.
எனவே அந்த நாடுகளில் எல்லா வேலைகளும் கௌரவத்துக்குரியதாகவே கருதப்படுகிறது.
எமது நாட்டில் கட்சிகள், இனங்கள், சாதிகள், என தொழிற்சங்க ரீதியாகப் தனித் தனி பலன்களை பெற்றுக்கொளவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களையும் தோட்டத் தொழிலாளிகளையும் தாழ்த்தப்பட்ட நிலையில் வைத்து அவர்களுக்கான கௌரவம் வழங்கப்படாதுள்ளது .
நாட்டின் முறைசார் துறையில் அனைத்தது தொழிலாளர்களுக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு எமது அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நாட்டில் 25 இலட்சம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் பொருளாதாரத்திற்கு 60ஈலட்சம் பேர் பங்களிக்கின்றனர். அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால் இந்த மீனவ சமூகத்தை பாதுகாக்க எந்தொரு முறையான திட்டமும் இல்லை.
இந்த 60 லட்சம் பேருக்கு கௌரவத்தையும் , பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் .
விசேடமாக தன் கையில் பணப் புழக்கம் இல்லாத சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும் ஆயுதமாகவே நாம் இந்த 'கருசரு' வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
தொழிலாளர் சட்டத்தை மாற்றி தொழில் பாதுகாப்பு சட்டம் அமைத்து அதில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பையும் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்போம்.
மீனவர்கள் வேலை செய்ய முடியாத நிலையில், வேலையிழந்த நிலையில் இவர்களை கவனித்துக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்கவே நாம் இந்த பணியை செய்து வருகிறோம்.
மூன்று மாதங்களுக்குள் நாட்டின் சகல தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பான அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நாம் உறுதியளித்திருந்தோம்.
அதன் மூலம் விவசாயக் காப்புறுதி, உழவர் காப்புறுதி, தொழிலாளர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்ற அனைத்து விதமான நிதிகளையும் திரட்டி அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான முன்மொழிவு நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
55 வயதுக்கு பிறகு நீங்களும் ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியம் போன்ற பொருளாதார நிதிகளைப் பெற முடியும். வேண்டுமானால் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். இது நாடு தழுவிய திட்டமாகும்.
இனிமேல் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் கடலுக்கு செல்ல அனுமதி பாத்திரம் வழங்கப்படாது .கடலுக்கு செல்பவர்கள் தங்களை காப்புறுதி செய்துகொள்ள வேண்டும், மேலும் இந்த காப்புறுதி பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது. ஆனால் படகு பழுதாகி மக்கள் அனைவரும் உயிர் இழந்தால் மட்டுமே காப்புறுதி செலுத்தப்படுகிறது.இதில் பல குழப்பங்கள் உள்ளன.
இந்த விடயங்யகள் எமது அமைச்சுடன் தொடர்புடையவை அல்ல. மீன்பிடி அமைச்சு தொடர்பான விடயங்கள். ஆனால் உங்கள் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் தேவையானதை நாங்கள் செய்கிறோம்.
உலகில் உள்ள மற்ற மீனவர்கள் மீன்பிடிக்கும்போது பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளைப் நாம் பயன்படுத்துகிறோமா?அவ்வாறு பயணத்துவதனால் எமது விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம்.இவற்றை சட்டங்களாக முன்வைக்க இருக்கிறோம்.சில சமயங்களில் நாங்கள் உங்களைச் சிக்கலில் சிக்க வைக்க முயல்வது போன்ற உணர்வு ஏற்படும்.ஏனைய நிறுவனங்களுடன் பேசி முரண்பாடின்றி இவற்றை மேற்கொள்ள முயன்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment