நிந்தவூர் தாழ் நிலப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய பிரதேச சபையினால் வடிகான் துப்பரவு செய்யும் பணி ஆரம்பம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளதால் மக்களின் நாளாந்த இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழமையாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் செல்லும் பிரதானவடிகானினூடாக வடிந்து செல்லும் வெள்ள நீர் கடலில் சேர்வது வழமையான ஒன்றாகும்.

பொது மக்கள் சிலரின் ஆய்ந்தோய்ந்து பாராத செயற்பாடுகளினால் வடிகான்களுக்குள் வீட்டுக்கழிவுகள்,விலங்கு கழிவுகள், கண்ணாடி மற்றும் போத்தல் ஓடுகள், திண்மக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகளை இடுவதனால் வடிகான்கள் அடைத்து வெள்ளநீர் வடிந்து செல்லாமையே இவ்வாறு தாழ் நிலங்களில் வெள்ளநீர் நிற்பதற்கான பிரதான காரணமாகும்.

நிந்தவூர் பிரதேச மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் பயனாக வேலைப்பகுதி மேற்பார்வையாளர் ஏ.எஸ்.நிஸாட் பிரதேச சபை ஊழியர்கள் மூலமாக வடிகான்களை துப்பரவு செய்யும் நடவடிகையினை துரிதப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :