அம்பாறை மாவட்டத்தில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 1011 நுகர்வோர் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முடியும் வரை நுகர்வோர் சட்டத்தை மீறிய 1011 வர்த்தகர்களுக்கு எதிராக நியாயாதிக்கத்திற்குட்பட்ட நீதிமன்றங்களில் 68 இலட்சத்து 68 ஆயிரத்து 998 ரூபாய்கள் தண்டப்பணப்பணமாக செலுத்தப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தெரிவித்தார்.

அம்பாறை, தெஹியத்தக்கண்டிய, அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோஸ்தர்கள் மேற்கொண்ட 1117 சுற்று வளைப்புகளின் போது இவ் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 1011 வழக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டிருந்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :