ஹிங்குராக்கொட பாடசாலை மாணவியின் புத்தகப் பையினுள் விஷப்பாம்பு இருந்ததால் பாடசாலை வளாகத்தினுள் பெரும் பரபரப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை பாடசாலைக்கு வருக தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.

விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள் கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.
இந்தப் பாம்பு அந்த மாணவியின் வீட்டிலிருந்தே புத்தகப்பைக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :