2038 புதிய கிராம அலுவலர்கள் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன – உளநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்



கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இம்முறை 2038 புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குழு அறிக்கை கிடைத்தவுடன் கிராம உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

கிராம அலுவலர் போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனூடாக 2038 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி; இந்த நியமனங்கள் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். கிராம உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் குழு அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :