மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் பேச்சு



லையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் பயிற்சி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழக மாநில அரசின் தொழில்நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியே வேளையிலேயே அவர் இவ்வாறு பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மலையகம் - 200 நிகழ்வு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலையகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு விசேடமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொடர்பான கற்கைநெறிகளுக்கான உதவிகள் பெறுவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :