கந்தளாயில் 800 ஏக்கர் வேளாண்மை அறுவடை நடவடிக்கைள் ஆரம்பித்து வைப்பு.





எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேரமடு பகுதியில் நெற் செய்கை பண்ணப்பட்ட 800 ஏக்கர் வேளாண்மை அறுவடை நடவடிக்கைகள் (30) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பேரமடு குளத்தின் நீரினை பயன்படுத்தி இம்முறை முதல் தடவையாக அதிகளவிலான ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கைகளின் அறுவடை செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த வருடம் குளத்தினை அபிவிருத்தி செய்தபின்னர் முதல் முறையாக 800 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கை அறுவடை நடவடிக்கையினை கிழக்கு மாகாண நீர்பாசன பொறியியலாளர் அப்துல் ஜப்பார் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கந்தளாய் நீர்ப்பாசன பொறியலாளர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :