ஹட்டன் கல்விவலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் 02.04.2023.செவ்வாய்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
இன்று காலை இந்த மாணவர்கள் பாடசாலைக்கு சமுகம் தந்து கொண்டிருந்த போது பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு மோதியமையினால் குளவி கூடு கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளதாக பாதிக்கபட்ட மாணவர்கள் தெரிவிக்கிக்னறனர் .
இதில் எல்பட தமிழ் வித்தியாலயத்தில் ஒரு ஆண் மாணவனும் 05பெண் மாணவர்கள் மற்றும் பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவி உட்பட மொத்தம் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் காயங்களுக்கு உள்ளான ஏழு மாணவர்களும் தரம் 11 வகுப்பை சேர்நதவர்கலன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
இதன் காரனதாக இன்றய தினம் ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை ழூடப்பட்டுள்ளதாக எல்பட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தியாகராஜன் தெரிவித்தார். இதேவேளை சம்பவத்தை அறிந்த பிரேதேச மக்கள் மரத்தில் இருந்த குளவி கூடுகளை தீ வைத்து அழித்தமை குறிப்படதக்கது.
0 comments :
Post a Comment