அதிபரை இடமாற்றலாகி செல்ல விடாமல் தடுத்த கல்வி சமூகம் !




காரைதீவு சகா-
டமாற்றம் பெற்று செல்ல இருந்த அதிபரை வெளியேற விடாமல் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ள காயான்மடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றிருக்கிறது.

அப்பாடசாலையின் அதிபர் வைரமுத்து சுந்தரநாதன் நேற்று முன்தினம் முதலைக்குடா மகா வித்யாலய அதிபராக நியமிக்கப்பட்டு இருந்தார் .

அதனை முன்னிட்டு அவர் பாடசாலையில் இருந்து சிரேஷ்ட ஆசிரியரிடம் கடமை பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேற முயற்சித்த பொழுது அங்குள்ள கல்வி சமூகம் அவரை செல்ல விடாமல் தடுத்தது.

"எமக்கு சுந்தர நாதன் அதிபர் தான் தேவை. அவரை விடமாட்டோம்" என்று அந்த கல்விச் சமூகம் ஒரு சில மணி நேரம் அங்கு பாடசாலை பிரதான வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்தது.
இதனை அறிந்த மட்டக்களப்பு மேற்கு வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம் மகேந்திர குமார் தலைமையிலான குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து பொதுமக்களோடு கலந்துரையாடினர்.
சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற அந்த கலந்துரையாடலில் விரைவில் ஒரு நிரந்தர அதிபரை நியமித்து தருவதாக உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
அதன் பின்பு அதிபர் வை.சுந்தரநாதனை விடுவித்து புதிய பாடசாலைக்கு செல்ல அனுமதித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :