சமகால பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2ம் கட்ட உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு !


வி.ரி.சகாதேவராஜா-
மகால பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராமங்களில் வாழும் ஒரு தொகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால்
இந் நிகழ்வு நேற்று(15) புதன்கிழமை நடாத்தப்பட்டது.

கண்ணகிகிராமம் சின்னபனங்காடு கோளாவில் வாச்சிகுடா அக்கறைப்பற்று7/4, 8/2 ஆகிய கிராமப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாளிகளுக்குஒரு குடும்பத்துக்கு தலா 10450.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் திட்ட இணைப்பாளர் அனிதா செல்வகுமார் மீளாய்வு கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி கிரிஜா ஆலையடிவேம்பு கள உத்தியோகத்தர் திருமதி நிஷாகரி பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர். ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணங்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :