'லெனின் மதிவானம் இளமை- புலமை – இனிமை’ நூல் வெளியீடு


மரர் லெனின் மதிவானின் நினைவாக “லெனின் மதிவானம்- இளமை- புலமை – இனிமை’ எனும் நூல் நேற்று சனிக்கிழமை (31.12.2022) அட்டன் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அமர்ர் லெனினின் துணைவியார் , அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, லெனின் தாயார் அஞ்சலி தீபம் ஏற்றிதுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதன் போது, வருகைதந்திருந்த அனைவரும் மெழுகுதிரி ஏற்றியிருந்ததுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் தலைவர் மு. ராமச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தியதையடுத்து , மல்லியப்புசந்தி திலகர் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
பின்னர் , நூல் தொகுப்பாசிரியர் ஜீவா சதாசிவம், நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் தலைவர் ஏற்பாட்டாளர் மு.இராமச்சந்திரன் அமரர் லெனின் மதிவானனின் தாயாருக்கு நூலின் முதற்பிரதியை வழங்கி வைத்தனர்.

நூல் வெளியீடு நிகழ்வில், மு. சிவலிங்கம் தலைமையுரையை நிகழ்த்த பேராசிரியர் பால. சுகுமார் சிறப்புரையாற்றினார்.
அமர்ர் லெனினின் புதல்வர் பிடல் கெஸ்ட்ரோவிற்கும் , அவரது இளைய சகோதரரும் நீதிபதியுமான இரா.ஜெ. ட்ரொக்ஸியின் புதல்வியான மார்க்ஸ் தீட்சண்யா ஆகியோருக்கு பேராசிரியர் பால. சுகுமாரின் கரங்களில் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து , எழுத்தாளர் சிராஜ் மஷஹூர் , விரிவுரையாளர்களான சுமதி அன்பரசு , ஜெ. சற்குருநாதன் , சிவா ஜேசுநேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பிரதி அதிபர், ச. வில்சன் நூல் பற்றிய உரை நிகழ்த்தினார். அதனையடுத்து, அமரர் லெனின் இளைய சகோதரரும் நீதிபதியுமான இரா. ஜெ.ட்ரொட்ஸ்க்கி குடும்பத்தின் சார்பாக உரை நிகழ்த்தினார். பின்னர் நன்றியுரையுடன், நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :