ஏறாவூர் கடலில் மூழ்கி மாணவன் பலி!



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் அலிகார் தேசிய பாடசாலை உயர்தர கலைப்பிரிவு மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான்(20) என்பவர் இன்று காலை குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்கு சென்று, சகோதரர் ஒருவருடன் குளித்துக் கொண்டிருக்கும் போது பாரிய அலையொன்றினால் இருவரும் அள்ளுண்டு சென்று, மற்றுமொரு அலையொன்றினால் கரைக்கு வந்தபோது ஒருவர் மரணித்தும் மற்றையவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுள்ளனர்.

ஆபத்தான நிலையிலிருந்த சகோதரர் உபைதுர்ரஹ்மான் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க.பட்டிருக்கிறார்.

மரணமடைந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான் என்ற மாணவனின் மரண விசாரணைகளை ,ஏறாவூர் பொலிசாருடன் சென்ற மரண விசாரணை அதிகாரி. எம்.எஸ்.எம். நஸீர் முன்னெடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :