கல்முனை மாநகரசபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தியது உயர் நீதிமன்றம்!


ல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை இலங்கை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஏ.எல். மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால போராட்டத்தின் பின்னர் கடந்த 14.02.2020ஆம் திகதி வெளி­வந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜன­நா­யக சோஷலிசக் குடி­ய­ரசு வர்த்­த­மானிப் பத்­தி­ரி­கையில்

சாய்ந்­த­ம­ருதுக்­கான நக­ர­சபை அறி­விப்பு வெளி­வந்திரு­ந்தது. இச்­ச­பையின் ஆரம்ப தின­மாக 2022 மார்ச் 20ஆம் திக­தி­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சாய்ந்­த­ம­ருது மக்­களின் சுமார் 33 வருட போராட்­டத்தின் அறு­வ­டை­யாக, நக­ர­சபை பிர­க­டனம் வெளி­வந்­தி­ருக்கும் இச்­செய்தி இம்­மக்­க­ளுக்கும் மண்­ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்­பதில் மாறு­பட்ட கருத்­துக்கு இட­மில்லை.

பின்னர் கடந்த 19.02.2020இல் நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை விடயம் பேசப்­பட்டு, அது­கு­றித்த அறி­விப்­புக்­களை வெளி­யிடும் வாாரந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரான அமைச்சர் பந்­துல குண­வர்­தன பின்­வரும் கூற்­றுக்­களைத் தெரி­வித்தார்.

“சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையை உரு­வாக்­கு­வ­தற்­காக, 14ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அதி­வி­ஷேட வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது” என்றும், “நாடு முழு­வதும் காணப்­படும் இவ்­வா­றான விட­யங்­களை மீள ஆராய்ந்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இதனை இடை நிறுத்­தி­யுள்­ள­தா­கவும், அதனை முற்­றாகத் தடை செய்­ய­வில்லை” எனவும், “இந்த வர்த்­த­மானி தொடர்பில் கடந்த சில நாட்­க­ளாக சிலர் முன்­வைத்து வரும் எதிர்ப்­புக்­களால் இந்த வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­ய­வில்லை” என்றும், “சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையை தற்­கா­லி­க­மாக இரத்துச் செய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை எடுத்த தீர்­மானம் வெகு விரைவில் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும்” என்ற கருத்­துக்­களை அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :