திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம் முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மயில் சின்னத்தில் அனைத்து சபைகளிலும் தனித்து போட்டியிடும் என மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்று (15) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்

திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல பிரச்சினைகள் நண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளன இவ்வாறானவற்றை தீர்க்கவும் பிரதேச பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் எமது கட்சி சகல சபைகளளையும் கைப்பற்றுவதற்காக நல்ல பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். காணி பிரச்சினை இன்னோரன்ன பல பிரச்சினைகள் உள்ளன இதனை கருத்திற்கொண்டு ஆட்சியை கைபற்றுவதன் ஊடாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஊடாக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :