அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் 100வது ஆண்டு விழா!


அஷ்ரப் ஏ சமத்-
கில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் 100வது ஆண்டு விழா 19 ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகாா்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலமா சபையின் தலைவா் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கௌரவ அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவா்த்தன, மற்றும் சபாநாயகா் மகிந்த யாபா அபேவர்த்தன, அமைச்சா்களான விஜயதாச ராஜபக்ச, விதுர விக்கிரமநாயக்க, அலி சப்ரி, நசீர் அஹமட், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுனா் ஏ.ஜே. முசம்மில் , பாக்கிஸ்தான் பங்கதேஸ், சவதிஅரேபியா, பலஸ்தீன், துருக்கி , போன்ற நாடுகளின் துாதுவா்கள், முப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளா், உட்பட விசேட பிரமுகா்கள் வருகை தந்திருந்தனா்.
இந் நிகழ்வில் ஜம்மியாவின் நுாற்றாண்டை முன்ணிட்டு தபால் உரையும் 25 ருபா பெறுமதியான முத்திரையும் வெளியீட்டு வைக்கப்பட்டு ஜனதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தபால் ஊடக இராஜாங்க அமைச்சா் பதில் தபால் மா அதிபரும் கலந்து கொண்டனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :