ஓட்டமாவடி - பாலைநகர் விபத்தில் மனைவி பலி; கணவர் படுகாயம்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
மோட்டார் சைக்கிள் - படி ரக வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (5) 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பகுதியிலுள்ள மகளின் வீட்டுக்கு சென்று விட்டு பாலைநகரிலுள்ள தனது வீட்டுக்கு கணவன் - மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிந்த போது, பின்னால் வந்த படி ரக வாகனம் மோதியதில் மனைவி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் பாலை நகர் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய உசனார் ஆமினா உம்மா என்பவர் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த கணவர் ஆதம் பாவா உசனார் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் படி ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :