திருகோணமலை முள்ளிப்பொத்தானை தி/கிண்/பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் மரநடுகை நிகழ்வு இன்று (15) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களின் பங்கேற்புடன் மரத்தை பாடசாலை வளாகத்தினுள் நட்டு வைத்தார்.குறித்த பாடசாலை மாணவிகளால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வு இடம் பெற்றது. இதனை தொடர்ந்து பாடசாலை மைதானத்தினுள்ளும் மரநடுகை இடம் பெற்றது.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மஹிந்த வனசிங்க,விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment