கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக கலந்த கொண்ட டைக்குவாண்டோ போட்டியில் மீண்டும் தேசியத்தில் வரலாற்று சாதனை படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி




அஸ்ஹர் இப்றாஹிம்-
ம் மாதம் 21,22,23 ஆகிய தினங்களில் கேகாலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட டைக்குவாண்டோ சுற்று போட்டியில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப்பதக்கம் , இரண்டு வெள்ளிப் பதக்கம் , இரண்டு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக ஐந்து தேசிய மட்ட பதக்கங்கள் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை வலயத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

இதில் 20 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான 80-87கிலோகிராம் எடைப் பிரிவில்ஜே.ஏ.சுமைத் தங்க பதக்கத்தையும் , 74-80 கிலோகிராம் எடைப் பிரிவில் எம்.எம்.நுஸ்ரி வெள்ளிப் பதக்கத்தையும் , 63-68 கிலோகிராம் எடைப் பிரிவில் ஏ.எல்.எம்.அப்ரி
வெண்கலப் பதக்கத்தையும் +87 கிலோகிராம் எடைப் பிரிவில் ஏ.எம்.நாஸிக் அன்சாப் வெண்கல பதக்கத்தையும், 18 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான +74 கிலோகிராம் எடைப் பிரிவில் ஜே.ஏ.சுரைப் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இம் மாணவர்களுக்கான பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர் யூ.எல்.எம்.இப்றாஹீம் ,ஏ.ஏ.ஸிஹாப் , எம்.எச் ஏ.ஹஸீன். ஏ.ஏ.ஹம்தான் , விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், மற்றும் உடற்கல்வி பிரிவு ஆசிரியர்கள் வழங்கியிருந்தனர்.

இப் போட்டியில் இக் கல்லூரி முதற் தடவையாக பங்குபற்றி தேசிய மட்ட சாதனை படைத்திருப்பதாக கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :