குண்டெறிதல் போட்டியில் சாதனை; வாழைச்சேனை அந்நூர் மாணவன் அய்மன் தேசிய மட்டத்திற்கு தெரிவு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் ஏ.ஆர்.ஏ.அய்மன் குண்டெறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் குறித்த மாணவன் 12.79 மீற்றர் தூரம் குண்டெறிந்து இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவன் அய்மனுக்கும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அலோஜிதன், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு பிரதீப் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :